BREAKING

பிஸினஸ்

பிஹார் அரசுடன் அதானி ஒப்பந்தம்.. ஒரே நாளில் மாறிய ஷேரின் விலை!

பிஹாரில் ரூ. 27,000 கோடி​ மதிப்பீட்டில் 2,400 மெகா​வாட் மின் உற்​பத்தி ஆலையை நிறு​வ அதானி பவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிஹார் மாநிலத்​துக்கு 25 ஆண்​டு​களுக்கு மின்​சா​ரம் வழங்​கு​வது தொடர்​பாக அம்​மாநில மின் உற்​பத்தி நிறு​வனத்​துடன் அதானி பவர் நிறு​வனம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, பாகல்​பூர் மாவட்​டம் பிர்​பைன்ட்​டி​யில் ரூ.26,482 கோடி மதிப்பில் அனல் மின் உற்​பத்தி தொழிற்​சாலை நிறுவப்படும். அங்கு, 800 மெகா வாட் திறன் கொண்ட 3 ஆலைகள் நிறு​வப்​படும். 5 ஆண்​டு​களில் உற்​பத்தி தொடங்​கப்​படும். இங்கு உற்​பத்தி செய்​யப்​படும் மின்​சா​ரம் பிஹார் மாநிலத்​துக்கு யூனிட்​டுக்கு ரூ.6.075 என்ற விலை​யில் வழங்​கப்​படும் என்று அதானி பவர் நிறு​வனம் தெரிவித்துள்ளது.

இந்த திட்​டத்​தின் கட்​டு​மானப் பணி​யின்​போது நேரடி​யாக​வும் மறை​முக​மாக​வும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்​கும் என்றும், தொழிற்​சாலை செயல்​பாட்​டுக்கு வந்​ததும் உடனடியாக 3 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்​கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்​டின் மிகப்​பெரிய அனல் மின் உற்​பத்தி நிறு​வனங்​களில் ஒன்றாக அதானி பவர் நிறுவனம், இந்தியாவில் இதுவரை 18,110 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையங்களை கொண்டிருக்கிறது. இந்நிலையில், புதிதாக பிஹாரில் மின் உற்​பத்தி ஆலையை அந்நிறுவனம் துவங்குகிறது.

அதானி நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்ட உடன், பங்குசந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகளின் விலை 2.5% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts